புதுச்சேரி; மாமனாரை கத்தியால் வெட்டிய மருமகள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.அரியாங்குப்பம் ராஜிவ்காந்தி வீதியை சேர்ந்தவர் பாலன், 80; இவரது மனைவி ஆதிலட்சுமி 75; இவர்களின் வீட்டின் பின்புறம் மகன் கிருஷ்ணன், 35 ; அவரது மனைவி தமிழரசி, 30 ; தனியாக வசிக்கின்றனர். குடும்பத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி3 மணியளவில் மாமனார் பாலன், அவரது மருமகள் தமிழரசி இடையே வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த தமிழரசி, சிறிய கத்தியை எடுத்து மாமனார் பாலனின் கையில் வெட்டினார். இதில் இடது சுண்டு விரலில் காயம் ஏற்பட்டது.புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்ற பாலன், நேற்று முன்தினம் கொடுத்த புகாரின் பேரில் மருமகள் தமிழரசி மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.