புதுச்சேரி; ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் காரணமாக, பி.ஆர்.டி.சி., பஸ்கள் இரண்டாவது நாளாக நேற்றும் இயக்கப்படவில்லை.புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.,) 270 ஒப்பந்த டிரைவர்கள், கண்டக்டர்கள் பணி புரிகின்றனர். இவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று முன் தினம் பி.ஆர்.டி.சி., பணிமனை வாயிலில் முற்றுகை போராட்டத்தை துவக்கினர். இரண்டாவது நாளாக போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. இதனால், கடந்த 2 நாட்களாக வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள், டவுன் பஸ்கள் இயக்கவில்லை.பஸ்கள் இயங்காததால் பெரிதும் அவதியடைந்துள்ள பயணிகள், 'போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து பஸ்களை உடனடியாக இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளனர்.காரைக்கால் காரைக்காலில் பி.ஆர்.டி.சி.,ஒப்பந்த ஊழியர்கள் சங்கத் தலைவர் ராஜா தலைமையில் கடற்கரைச் சாலையில் உள்ள பணிமனையை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நகர இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 30 ஊழியர்களை கைது செய்தனர்.