விழுப்புரம்;விழுப்புரம் சக்தி விநாயகர் வழிபாட்டு மன்றத்தில், கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, மன்ற தலைவர் ஞானபிரகாசம் தலைமை தாங்கினார். செயலாளர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில், 94 மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது. அப்போது, இயக்குனர்கள் கிருஷ்ணராஜ், ஏழுமலை, சிவக்குமார் கலந்து கொண்டனர்.பொருளாளர் ராமலிங்கம் நன்றி கூறினார்.