மாதவரம் - மாதவரம் பால் பண்ணையில் உள்ள, மீன்வள பூங்காவில், மத்திய மீன்வளத் துறை அமைச்சர், நேற்று ஆய்வு செய்தார்.சென்னை, மாதவரம் பால் பண்ணையில், தமிழ்நாடு மீன்வள பல்கலை வளாகத்தில், வண்ண மீன் வானவில் தொழில்நுட்ப பூங்கா, பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 2017ல் திறக்கப்பட்டது.இங்கு, பல வகை வண்ண மீன்கள் வளர்க்கப்படுகின்றன.மேலும், வண்ண மீன் விற்பனையாளர்களுக்கு, மீன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, தமிழ்நாடு மீன்வள பல்கலை சார்பில் சான்றிதழும் வழங்கப்படுகிறது.இந்த, வண்ண மீன் வானவில் தொழில்நுட்ப பூங்காவை, மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ்சிங், நேற்று மாலை ஆய்வு செய்தார்.ஆய்வில், மீன்வள பல்கலை துணைவேந்தர் கோ.சுகுமாரன் உட்பட, அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, ஆவின் பால் உற்பத்தி மையத்தை பார்வையிட்டு, பால் உற்பத்தி, வினியோகம், தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தார்.