பண்ருட்டி; பண்ருட்டி அருகே மகளைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.பண்ருட்டி அடுத்த ஒறையூர் பாலமுருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவரது 19 வயது மகள் சென்னையில் உள்ள பாலிடெக்னிக்கில் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.கொரோனா காரணமாக வீட்டில் ஆன்லைன் மூலம் படித்து வந்தார். இவரை கடந்த 20ம் தேதி இரவு முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அவரது தாய் அளித்த புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.