திண்டிவனம் : நிலப்பிரச்னையில் தம்பதி உள்ளிட்ட மூவரை உருட்டு கட்டையால் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ரயில்வே பீடர் தெருவைச் சேர்ந்தவர் சம்பத். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ரேவதி,27; இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த துரைமுருகன் குடும்பத்தினருக்கும் நிலப்பிரச்னை உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் ரேவதி, விறகு உடைக்க சென்றபோது, துரைமுருகனின் மனைவி தேவியுடன் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த துரைமுருகன், தேவி ஆகியோர் சேர்ந்து ரேவதியை உருட்டு கட்டையால் தாக்கினர்.
தடுக்க முயன்ற சம்பத் மற்றும் அவரது உறவினர் சந்திரன் ஆகியோரையும் தாக்கினர். படுகாயமடைந்த மூவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ரேவதி அளித்த புகாரின்பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.