கிருஷ்ணகிரி: தேர்தலுக்கு முன்பே, அனைத்து வகையான கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என, தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க, மாவட்ட செயலாளர் சென்னையநாயுடு, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது: தமிழகத்திலுள்ள பெரும்பாலான விவசாயிகள், விவசாயம் செய்து, தங்கள் குடும்பத்தை காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற வங் கிகளில், தங்களிடம் உள்ள ஆவணங்களை கொடுத்து, கடன் பெற்று விவசாயம் செய்கின்றனர். அவ்வாறு விவசாயம் செய்தாலும், மழை பொய்த்து விடுவதாலும், வெள்ளத்தாலும், காட்டு விலங்குகளாலும் விவசாயம் பெரிதும் பாதிக்கிறது. இதனால், தொடர்ந்து விவசாயம் செய்ய முடியாமலும், வங்கிகளில் பெற்ற கடனை திரும்பி செலுத்த முடியாமலும் உள்ளது. இந்நிலையில் சம்மந்தப்பட்ட வங்கி அதி காரிகள் கடன்களை திருப்பி செலுத்த நிர்ப்பந்தம் செய்வதால், வேதனை யடைந்த விவசாயிகள், அவமானம் தாங்காமல், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கிறது. எனவே, வரும் சட்டசபை தேர்தலுக்கு முன்பே, விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களை யும், தள்ளுபடி செய்ய வேண்டு?ம். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.