சென்னை; இந்திய கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன், உடல் நலக்குறைவு காரணமாக, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்திய கம்யூ., மூத்த தலைவர் தா.பாண்டியன், 88, சிறுநீரக பிரச்னை காரணமாக, 10 ஆண்டுகளாக தொடர்ந்து டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.சில தினங்களாக, தா.பாண்டியனின் உடல் நிலை மோசமடைந்தது. நேற்று, அவர் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.