ராமநாதபுரம் : சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுஉள்ளதால் ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பொது மக்கள் மனுக்களை போட பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்தோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறும். மனுக்களை நேரடியாக கலெக்டர் பெறுவதால் வாரந்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். தற்ேபாது தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி குறைதீர்ப்பு முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதற்கு பதிலாக புதிய, பழைய கலெக்டர் அலுவலக நுழைவுப்பகுதியில் பொதுமக்கள் மனுக்களை போடுவதற்காக பெட்டிகள்வைக்கப்பட்டுள்ளது என வருவாய்துறை அதிகாரிகள் கூறினர்.