கள்ளக்குறிச்சி- புக்கிரவாரி கிராமத்தில் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16; வயது இளம்பெண். இவர் 8 ம் வகுப்பு வரை படித்துள்ளார். தற்போது வீட்டில் உள்ளார். கடந்த 27 ம் தேதி காலை மளிகை பொருட்கள் வாங்குவதற்காக அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றவரை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதனால் அச்சமடைந்த குடும்பத்தினர் நண்பர் மற்றும் உறவினர் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியுள்ளார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.