ராமநாதபுரம் : தமிழ்நாடு தொழிலாளர்நலவாரியம் மூலம்தையல் இயந்திரம், உயர்கல்விக்கான நுழைவுதேர்வு பயிற்சிக்கு உதவித்தொகை ஆகிய நலத்திட்டங்கள் பெற தகுதியான தொழிலாளர்களிடம்விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு தொழிலாளர்நல வாரியத்திற்கு நலநிதி செலுத்தும் தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார், போக்குவரத்துநிறுவனங்கள், உணவுநிறுவனங்கள், தோட்டநிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் தொழிலாளர்கள், அவர்களை சார்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்க வாரிய கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.இதன்படி அரசு அங்கீகாரம் பெற்ற தையற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள், அவர்களை சார்ந்தவர்களுக்கு தையல் இயந்திரம் வாங்குவதற்கு உதவித்தொகை, உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வு எழுதும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பயிற்சி உதவித்தொகை வழங்கப்படஉள்ளது.
தொழிலாளியின் மாத ஊதிய உச்சவரம்பு அடிப்படை சம்பளம், அகவிலைப்படி ரூ.25 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் தேனாம்பேட்டை என்ற முகவரியில் tnlwboard@gmail.com இமெயிலில், 89397 82783 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.