வாலாஜாபாத்:ராணுவ வீரர் துாக்கிட்டு தற்கொலை செய்தார்.வாலாஜாபாத் அடுத்த, திம்மையன்பேட்டை கிராமம், வன்னிப்பேட்டை பகுதியைச்சேர்ந்தவர் செந்தில்குமார், 38; ராணுவ வீரர். இவருக்கு, இரு மகன்கள் உள்ளனர்.
கணவன், மனைவிக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், மனமுடைந்த ராணுவ வீரர், நேற்று முன்தினம் மாலை, தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தகவலறிந்த, வாலாஜாபாத் போலீசார், இறந்தவரின் சடலத்தை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.