உசிலம்பட்டி-உசிலம்பட்டி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் உர விற்பனையாளர்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க உர விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) சக்தி கணேசன், உதவி இயக்குனர்கள் ராமசாமி, சுமதி, வேளாண் அலுவலர்கள் முத்துலட்சுமி, மணிமேகலை, ராஜேஸ்வரி பங்கேற்றனர். உர விற்பனை அடையாள எண் பெறுதல், இருப்புப் பதிவேடு பராமரித்தல் உள்ளிட்ட பயிற்சியளிக்கப்பட்டது. கூடுதல் விலைக்கு உரங்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.