பெரியகுளம் : பெரியகுளம் நகராட்சி 5 வது வார்டு செக்கடி கோயில் தெருவில் சில தினங்களுக்கு முன் சாக்கடை துார்வாரும் பணி நடந்தது. பணி முடிந்த பிறகு கான்கிரீட் சிலாப் சரியாக மூடப்படவில்லை. இதனால் சைக்கிள், டூவீலர் வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் வயதானவர்கள் விழுந்து காயப்படுகின்றனர். நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.