பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை மெயின்ரோடு செல்வ விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி உற்சவ நிறைவு விழா நடந்தது.
அதை முன்னிட்டு, விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, சந்தானகாப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர்கள், செய்திருந்தனர்.