தர்மபுரி: தர்மபுரி, பா.ஜ., கட்சி அலுவலகத்தில், பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின், 105வது பிறந்தநாள் விழா நடந்தது. மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட, பா.ஜ., சார்பில் நேற்று, அவரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் செல்லபாண்டியன், பொருளாதார பிரிவு அணி தலைவர் ஐஸ்வர்யம் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.