பாப்பிரெட்டிப்பட்டி: பொம்மிடி ரயில்வே மேம்பாலம் கீழ், சேலம்-சென்னை செல்லும் ரயில் பாதையில், 35, வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், நேற்று காலை இறந்து கிடந்துள்ளார். பொ.மல்லாபுரம் வி.ஏ.ஓ., பெருமாள், மொரப்பூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். எஸ்.ஐ., வெங்கடாசலம் மற்றும் போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.