ஆனைமலை:ஆனைமலை, திவான்சாபுதுார் புதுக்காலனியில் நேற்று முன்தினம் இரவு, சுப்ரமணியனின், ஓட்டு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.வீட்டில் அமர்ந்திருந்த அவரின் மீது கற்கள் மற்றும் ஓடுகள் விழுந்ததில் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.