ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் விழா நிறைவை முன்னிட்டு புஷ்பயாகம் நடந்தது. இதைமுன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு கோபால விலாசம் பகல் பத்து மண்டபத்தில் பல்வகை மலர்களால் பூக்கோலமிட சிறப்பு பூஜைகளை ரகுராம பட்டர் செய்தார். அலங்காரத்தில் எழுந்தருளிய பெரிய பெருமாள், ஸ்ரீ தேவி, பூமா தேவியை பக்தர்கள் தரிசித்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன் செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள் செய்தனர்.