கடலுார்-கடலுார் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 877 ஆக உயர்ந்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் புதிதாக 22 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 877 ஆனது. நேற்று, 29 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால் குணமானோர் எண்ணிக்கை 62 ஆயிரத்து 750 ஆனது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 228 பேரும், கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர் வெளி மாவட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். இறந்தவர்கள் எண்ணிக்கை 864 ஆக உள்ளது. நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை.