கோவை;கோவையில் நேற்று, 152 பேர் கொரோனா தொற்று குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.கோவை மாவட்டத்தில் நேற்று 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 45 ஆயிரத்து 647 ஆக உயர்ந்தது. 5 பேர் இறந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 2,397 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 152 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதுவரை 2 லட்சத்து 41 ஆயிரத்து 779 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 1,471 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.