ராமநாதபுரம்--மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (நவ., 26ல்) வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.தனியார்துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வு செய்யலாம். பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள்,ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள் தகுதிக்கேற்ப வேலை பெறலாம். சுய விபரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் வர வேண்டும். வேலைவாய்ப்பு பெறுவதினால் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது என கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துஉள்ளார்.