நத்தம்---அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்கள் தங்களை பதிவு செய்ய தனிஇணையதள முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு செல்லாததால் கற்றல் திறன்களில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய 'இல்லம் தேடி கல்வி' திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் முதற்கட்டமாக 13 மாவட்டங்களில் பரிசோதனை முறையில் துவக்கப்பட்டுள்ளது.இதில் 12ம் வகுப்பு முடித்த தன்னார்வலர்கள் 1 - 5 வகுப்பு மாணவர்களுக்கும், இளநிலைப்பட்டம் அல்லது அதற்கு நிகரான கல்வி பயின்றவர்கள் 6 - 8 வகுப்பு மாணவர்களுக்கும் மாலை நேரத்தில் சிறப்பு பயிற்சி அளிப்பர். இதில் பணியாற்ற விரும்பும் தன்னார்வலர்கள் தங்களை பதிவு செய்யhttps://illamthedikalvi.tnschools.gov.in/volunteer_registrationஎன்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.