தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில், 36 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் கிடப்பதாக, ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கை, கால், முகம் ஆகியவை சிதறியிருந்ததால், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.