புது வண்ணாரப்பேட்டை : புதுவண்ணாரப்பேட்டை அருகே, 1.5 டன் செம்மரம் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.புதுவண்ணாரப்பேட்டை வழியாக செம்மர கட்டைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்குதகவல் கிடைத்தது.
போலீசார்சோதனையில் செம்மரக்கட்டை கடத்திய டெம்போ வேன் சிக்கியது.விசாரணையில், செங்குன்றம், பாடியநல்லுார், எம்.ஜி.ஆர்., தெருவைச் சேர்ந்த வெங்கடேசன், 38, என்பவர் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.மேலும், இவருக்கு பழக்கமான ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த டிரைவர் முருகன் என்பவர், அவரின் டெம்போ வேனில், ஒன்றரை டன் அளவுடைய 46 செம்மர கட்டைகளை ஏற்றி, அதை வேலுாருக்கு எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்.வெங்கடேசன், டெம்போ வேனில் செம்மரங்களை ஏற்றி வேலுாருக்கு புறப்பட்டார். வழி தவறி, புது வண்ணாரப்பேட்டை மார்க்கமாக வந்தது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள், வனச்சரக அலுவலர் செல்வகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டன.வெங்கடேசனிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர். தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகின்றனர்.