கோவை : கோவையில் நேற்று, 117 பேர் கொரோனாவில் குணமடைந்து, 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.மாவட்டத்தில் நேற்று, 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 49 ஆயிரத்து 963 ஆக உயர்ந்தது. ஒருவர் இறந்தார். பலி எண்ணிக்கை 2,462 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 117 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 2 லட்சத்து 46 ஆயிரத்து 259 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 1, 242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.