கோவை: கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள், பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தில் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.இது குறித்து, கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:கோவை மாவட்டத்தில் கால்நடைகள்வளர்க்கும் விவசாயிகளின்வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மத்திய அரசின் பிரதமமந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ், கடன்உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்த திட்டத்தின் கீழ், கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகள் பயன்பெற, மாவட்ட அளவிலான சிறப்பு முகாம் வரும் பிப்., வரை நடைபெற உள்ளது. வெள்ளிதோறும் நடக்கும், இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். மாவட்டத்தின் அனைத்து கால்நடை மருந்தகங்களிலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எனவே, கிசான் கடன் அட்டை திட்டத்தின் மூலம், பயன்பெற ஆர்வம் உள்ள விவசாயிகள், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் முன் பக்க அட்டை நகல், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்மற்றும் நில ஆவணங்களின் நகல்களுடன், அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, நிர்ணயம் செய்யப்பட்ட வட்டியில் கடன் தொகை வழங்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.