திண்டுக்கல்:அலைபேசியில் 'வீடியோ கேம்' ஆடியதை தாய் கண்டித்ததால், பள்ளி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
தற்போதைய கொரோனா தொற்று சூழலால், ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்காததால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்தன. இதை பயன்படுத்தி, மாணவர்கள் வீடியோ கேம் ஆடுவது அதிகரித்தது.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே செங்குறிச்சி புளியம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லத்துரை, 17; இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அலைபேசியில் அடிக்கடி வீடியோ கேம் ஆடியதை, தாய் அழகம்மாள் கண்டித்தார்.இதில் விரக்தியான செல்லத்துரை விஷக் கிழங்கை தின்று மயங்கி கிடந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.