பாகூர்-பிள்ளையார்குப்பத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டி பொருட்களை உற்பத்தி செய்த, தனியார் தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டது.புதுச்சேரி அரசு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பைகள், குவளைகள், தட்டுகள், போன்ற எட்டு விதமான பொருட்களை உற்பத்தி செய்ய, விற்க, பயன்படுத்த தடை விதித்துள்ளது.புதுச்சேரி மாசு கட்டுப்பாடு குழுமம், வருவாய் துறை, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து இணைந்து இத்தகைய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, விற்பனை செய்யும் கடைகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது.பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாகூரை ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத கொம்யூனாக மாற்றப்பட்டுள்ளது.புதுச்சேரி சீனியர் சுற்றுச் சூழல் பொறியாளர் ரமேஷ் பிள்ளையார்குப்பம் - பின்னாட்சிக்குப்பம் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் நேற்று ஆய்வு செய்தார்.அங்கு தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தப்படும் மெல்லிய கவர்கள் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அந்த தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிக்க சுற்றுச்சூழல் துறை செயலர் ஸ்மிதா உத்தரவிட்டார். அதன்பேரில், மின் துறையினர் தொழிற்சாலையின் மின் இணைப்பினை துண்டித்தனர்.