காட்டுமன்னார்கோவில் : தாக்கியதால் மனைவி இறந்து விட்டதாக நினைத்து கார் மெக்கானிக் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வடக்கு கொளக்குடியைச் சேர்ந்தவர் ராஜி, 45; இவர் தைக்காலில் கார் ஒர்க் ஷாப் வைத்துள்ளார்.
இவரது 2வது மனைவி மைதிலி, 35; நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வீட்டிற்கு சென்ற ராஜி, மனைவி மைதிலி மீது சந்தேகமடைந்து தகராறு செய்தார். பின் இருவரும் துாங்கச் சென்றனர்.நள்ளிரவில் துாங்கிய மைதிலியின் தலையில் அம்மி கல்லை போட்டு ராஜி வெளியே சென்றார். படுகாயமடைந்த மைதிலியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
பின் மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.இந்நிலையில் அம்மி கல்லை போட்டதால் மனைவி இறந்ததாக நினைத்த ராஜி, தனது கார் ஒர்க்\ஷாப்பில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகன் குறளரசன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.