கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்மருதுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில், பள்ளிக் கல்வித் துறையின் இல்லம் தேடி கல்வி திட்ட துவக்க விழா நடந்தது.
நவமால்மருதுார் அங்கன்வாடி உள்ளிட்ட மூன்று மையங்களில் நடந்த விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி தலைமை தாங்கினார்.ஒன்றிய கவுன்சிலர் கலைராஜன், ஊராட்சி துணை தலைவர் ரேகா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியை ஜெயந்தி வரவேற்றார். கண்டமங்கலம் வட்டார கல்வி அலுவலர் உமாராணி துவக்கி வைத்து பேசினார்.ஆசிரியர் கந்தன் நன்றி கூறினார்.ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.