விழுப்புரம், : விழுப்புரத்தில் அனுமதியின்றி வாகனத்தில் மணல் கடத்திய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மேற்கு சப்-இன்ஸ்பெக்டர் மணி தலைமையிலான போலீசார் நேற்று சென்னை நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர்.
அங்கு, அனுமதியின்றி ஆற்று மணலை ஏற்றி கொண்டு வந்த டாடா ஏஸ் வாகனத்தை போலீசார் நிறுத்தி, பறிமுதல் செய்தனர். இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த விழுப்புரம், சாலாமேடு, ரங்கநாதன் மகன் மணிவண்ணன்,23; சங்கர் மகன் பார்த்தசாரதி,19; ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.