மதுரை : மதுரையில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத நிலையில் அபராதம் செலுத்துமாறு எஸ்.எம்.எஸ்., வந்தால் அதை ரத்து செய்ய கமிஷனர், எஸ்.பி., அலுவலக இமெயில், வாட்ஸ்ஆப்பில் புகார் தெரிவித்து தீர்வு காணலாம்.ெஹல்மெட் அணியாதது, அதிக பாரம், அதிவேகம், சிக்னலை மதிக்காமை போன்ற காரணங்களால் அபராதம் விதிக்கப்படுகிறது.
எந்த வகையான விதிமீறலில் ஈடுபட்டுள்ளோம் என குறிப்பிட்டு வாகன உரிமையாளருக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்படுகிறது. அதை ஆன்லைனில் செலுத்த முடியும். சில வாகன உரிமையாளர்கள் தாங்கள் விதிமீறலில் ஈடுபடாத போது எப்படி அபராதம் விதிக்க முடியும். அதற்கு ஆதாரம் உண்டா என கேள்வி எழுப்புகின்றனர்.போக்குவரத்து போலீசார் கூறியதாவது:
எந்த வகையான விதிமீறலில் ஈடுபட்டனர் என்ற ஆதாரம் போட்டோவுடன் எங்களிடம் இருக்கும். இதுகுறித்தும், சில நேரங்களில் வாகன பதிவெண் குளறுபடியால் தவறாக எஸ்.எம்.எஸ்., வரும்போதும் கமிஷனர்(வாட்ஸ் ஆப் 83000 21100), எஸ்.பி., அலுவலகத்திற்கு (94443 96596) உரிமையாளரின் போன் எண்ணுடன் புகாரில் தெரிவிக்கலாம்.
அந்த எண்ணில் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டோரை நேரில் அழைத்து எங்களிடம் உள்ள ஆதாரத்தை காண்பிப்போம். தவறாக அபராதம் விதித்திருந்தால் அதை ரத்து செய்வோம் என்றனர்.