வீடு புகுந்து திருட்டுமயிலம்: ஜக்காம்பேட்டையைச் சேர்ந்தவர் முருகன், 45; இவர், சிதம்பரத்தில் உள்ள இனிப்பகம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது மனைவி ஜெயந்தி உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வெளியூர் சென்றிருந்தார். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு ஜெயந்தி வந்து பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 4 சவரன் நகை திருடு போயிருப்பது தெரியவந்தது. மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.அடையாளம் தெரியாத நபர் சாவுமரக்காணம்: டி.புதுப்பாக்கம் பாலத்தின் கீழ் மர்மமான முறையில் 35 வயது மதிக்கதக்க நபர் இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. வன்னிப்பேர் வி.ஏ.ஓ., அளித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கீழே விழுந்து பெண் சாவுகள்ளக்குறிச்சி: கொட்டையூர் பழைய காலனியைச் சேர்ந்தவர் திருமாறன் மனைவி இளவரசி, 42; இவருக்கு, கடந்த 30ம் தேதி திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, கடந்த 4ம் தேதி இரவு இறந்தார். வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.தம்பதிய தாக்கிய இருவர் மீது வழக்குகள்ளக்குறிச்சி: ராஜா நகரைச் சேர்ந்தவர் பாபு. கள்ளக்குறிச்சி -சேலம் மெயின் ரோடில் ரோட்டில் டிராக்டர் இன்ஜினியரிங் ஒர்க்ஸ் கடை வைத்துள்ளார். 4 மாதங்களுக்கு முன், தென்கீரனுார் காலனியைச் சேர்ந்த இளையராஜா என்பவர் 90 ஆயிரம் ரூபாய்க்கு டிராக்டர் டிப்பர் வாங்கினார். டிப்பர் சரியில்லை என திருப்பி கொண்டு வந்து விட்டு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கேட்டுள்ளார். அதற்கு மறுத்ததால், ஆத்திரமடைந்த இளையராஜா, அவரது நண்பர் கருணா ஆகியோர் பாபு, அவரது மனைவி கவிதா ஆகியோரை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார், இளையராஜா, கருணா ஆகிேயார் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.