ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கொரோனா குணமான, 13 பேர் நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.நேற்று, 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 34 ஆயிரத்து 165 ஆனது. நேற்று, 13 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். இதுவரை, 33 ஆயிரத்து 787 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலி எண்ணிக்கை, 216 ஆக உள்ளது.