அரூர்: அரூர் அடுத்த புழுதியூரில், நேற்று கூடிய வாரச்சந்தைக்கு, கலப்பின மற்றும் ஜெர்சி வகையை சேர்ந்த, 85 மாடுகள் மற்றும் கன்றுகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். கலப்பின மாடு ஒன்று, 25 ஆயிரம் முதல், 62 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. அதேபோல், வளர்ப்பு மாட்டுக்கன்று ஒன்று, 6,000 முதல், 22 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. நேற்று நடந்த சந்தையில், மாடுகளின் வரத்து குறைந்து, 23 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.