சென்னையில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால், பல்வேறு சாலைகள் சேதமடைந்துள்ளன. இதை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்து வருகின்றனர்.இந்நிலையில், அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் பாடி மேம்பாலம் அருகில் உள்ள எம்.டி.எச்., சாலையில், மழையால் கற்கள் முழுதும் பெயர்ந்து சேதமடைந்து உள்ளது.
வாகனங்கள் செல்லும் போது புழுதிப்படலம் சாலையை மறைக்கிறது. இதனால், பெரிய வாகனங்கள் பின்னால் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். மேலும், சுற்றுச்சூழல் மாசுபட்டு, பொதுமக்கள் தும்மல், அலர்ஜியால் அவதிப்படுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.