திருப்பூர்:திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த, இரண்டு நாட்களாக சேவல் சண்டை நடப்பதாக போலீசார் பல்வேறு இடங்களை கண்காணித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குன்னத்துார், சின்னக்காட்டு வலசு, தாராபுரம், வீராச்சிமங்கலம், பொன்னாபுரம், அலங்கியம், சி.குமாரபாளையம், காங்கயம், சித்தம்பாளையம், மூலனுார், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, 33 பேரை கைது செய்து, 26 சேவல், 2 லட்சத்து, 19 ஆயிரம் ரூபாய், ஏழு டூவீலர், ஐந்து கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.