கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது.சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 32 ஆயிரத்து 497 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 120 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்து 617 ஆக உயர்ந்தது. இதில் 31 ஆயிரத்து 622 பேர் குணமடைந்தனர். 210 பேர் இறந்தனர். 785 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.