இப்பணியில் 1,300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.முக்கியமாக, புதுச்சேரி மாநில எல்லைப் பகுதிகள் அனைத்தும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. அது மட்டுமின்றி, கடற்கரை பகுதிகளான கோட்டக்குப்பம், ஆரோவில், மரக்காணம் பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடாமல் இருப்பதற்காக, போலீசார் மூலம் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பொதுமக்கள் இந்த ஊரடங்கிற்கு, நோய் தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வீடுகளில் இருந்து கொண்டு, தேவையின்றி வெளியே வராமல் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மீறி வெளியே வந்தால் வழக்குகள் பதிவதோடு, அபராதம் வசூலிக்கப்படும்' என்றார்.