காரில் துாங்கியவர் மூச்சு திணறி பலிபொன்னேரி: காரில் 'ஏசி' போட்டு துாங்கியவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தார்.பொன்னேரி அடுத்த, கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிபிரசாத், 41; அறுவடை இயந்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.இவர், கடந்த 14ம் தேதி, வெளியில் சென்று வருவதாக கூறி, 'ஸ்விப்ட்' காரில் புறப்பட்டார்.
மாலை 4:00 மணிக்கு, வீட்டின் அருகில் உள்ள பாலாஜி அவென்யூ என்ற இடத்தில், ஹரிபிரசாத் கார் இருந்தது. உள்ளே மூச்சு திணறலுடன் ஹரிபிரசாத் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்டு அருகில் வசிப்பவர்கள் அவரை வெளியே கொண்டு வந்தனர்.ஆபத்தான நிலையில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் இறந்தார். போலீசார் விசாரணையில், காரில் 'ஏசி' போட்டு துாங்கியவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது தெரிந்தது. இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.