குளித்தலை: பைக்குள் மோதியதில், ஒருவர் படுகாயமடைந்தார். குளித்தலை அடுத்த, மாயனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ், 32. இவர், கடந்த, 13ல், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாயனூர் ரயில்வே கேட் அருகே வந்தபோது, எதிரே திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த சிங்காரவேல் மகன் சக்திகுமார் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சுரேஷ் படுகாயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து, மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.