குளித்தலை: குளித்தலையில், மயங்கி விழுந்த முதியவர் பலியானார். குளித்தலை நகராட்சி, வைகநல்லூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி, 79. இவர், கடந்த, 13ல், வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, நேற்று முன்தினம் இரவு, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.