புதுச்சேரி-திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சேர வாணரப்பேட்டை ராஜராஜன் வீதியை சேர்ந்தவர் சத்தியராஜ்,36; கார் டிரைவர். இவரது தம்பி மகிமை தாஸ் (26). இவர் புஸ்சி வீதியில் பானிபூரி கடை நடத்தி வந்தார். இவருக்கு அடுத்த மாதம் 6ம் தேதி திருமணம் நடத்த, நிச்சயிக்கப்பட்டு இருந்தது. மகிமைதாசின் குடிபழக்கத்தை அண்ணன் சத்தியராஜ் கண்டித்து வந்தார்.நேற்று முன்தினம் போதையில் வந்ததை கண்டித்ததால் மனமுடைந்த மகிமைதாஸ் வீட்டில் துாக்குபோட்டுக் கொண்டார். அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.