உடுமலை:உடுமலை அருகே, வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.உடுமலை எஸ்.வி.,புரத்தை சேர்ந்த, சீனான் மனைவி செந்துாரம்மாள்,73. நேற்று பஸ் ஸ்டாப்பிலிருந்து, ரோட்டை கடக்க முயன்ற போது, அவ்வழியே வந்த லாரி மோதியது.பலத்த காயமடைந்த அவர், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் வழியில் இறந்தார். வாகனத்தை ஓட்டி வந்த, கரூர் அரவக்குறிச்சியைச்சேர்ந்த டிரைவர் மகேந்திரகுமாரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.