ஓசூர்: பாகலூர் அருகே சூடாபுரத்தை சேர்ந்தவர் பாலாஜி, 19. வேன் டிரைவர்; இவரும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான பரத், 20, என்பவரும், டி.வி.எஸ்., அப்பாச்சி பைக்கில், சூளகிரி நோக்கி நேற்று மதியம், 3:00 மணிக்கு சென்றனர். பாலாஜி பைக்கை ஓட்டினார். கொலதாசபுரம் கிராமம் அருகேயுள்ள தனியார் லேஅவுட் எதிரே, அவ்வழியாக வந்த மகேந்திரா பொலிரோ பிக்கப் வாகனமும், பைக்கும் மோதிக்கொண்டன. இதில், பாலாஜி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த பரத், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாகலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.