கோவை: கோவையில் நேற்று (ஜன., 18), 786 பேர் கொரோனா குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் நேற்று, 2,228 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 69 ஆயிரத்து 50 ஆக உயர்ந்தது. ஐந்து பேர் இறந்தனர். பலி எண்ணிக்கை, 2,536 ஆக உயர்ந்தது.அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 786 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 2 லட்சத்து 54 ஆயிரத்து 920 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 11 ஆயிரத்து 594 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.