புதுச்சேரி-மின் கட்டணத்தை உரிய தேதிக்குள் செலுத்தி அபராதத்தினை தவிர்க்குமாறு மின் துறை அறிவுறுத்தியுள்ளது.நகர மின் துறை கோட்ட செயற்பொறியாளர் கனியமுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நகர்ப்புற மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் நுகர்வோர் மின் கட்டண பாக்கி வைத்துள்ளனர்.கடற்கரை சாலை முதல் திப்புராயபேட்டை, வம்பாகீரப்பாளையம், நெல்லித்தோப்பு, எல்லப்பிள்ளைச்சாவடி வரை, முருங்கப்பாக்கம் முதல் முத்தியால்பேட்டை வரை உள்ள மின் நுகர்வோர், மின் கட்டணத்தை கடைசி தேதிக்குள் செலுத்தி அபராத தொகையை தவிர்க்க வேண்டும்.,மேலும் சாரம், ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், பாலாஜி நகர், சுதந்திர பொன் விழா நகர், திருமுடி சேதுராமன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மின்நுகர்வோரும் கடைசி தேதிக்குள் கட்டணத்தை செலுத்திட வேண்டும்.