கோவை : கோவையில் நேற்று, 955 பேர் கொரோனா குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் நேற்று, 3,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 2 லட்சத்து 72 ஆயிரத்து 140 ஆக உயர்ந்தது. ஒருவர் இறந்தார். பலி எண்ணிக்கை, 2,537 ஆக உயர்ந்துள்ளது.அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற, 955 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 2 லட்சத்து 55 ஆயிரத்து 875 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது, 13 ஆயிரத்து 728 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.