பெரியகுளம் : பெரியகுளம் அருகே எ.காமாட்சிபுரத்தில் கூலித்தொழிலாளி செந்தில் 50, எரித்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எ.காமாட்சிபுரம் குப்பை தொட்டியில் நேற்று பாதி எரிந்த நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தார். டி.எஸ்.பி., முத்துக்குமார் தலைமையிலான போலீசார் உடலை மீட்டனர். விசாரணையில் இறந்தவர் செந்தில் 50, என்பதும், இவரது தந்தை சிங்காரவேலுக்கு இரு மனைவிகள். முதல் மனைவி ராஜம்மாளின் மகன் செந்தில் என்பதும் தெரியவந்தது. சொத்து தகராறில் எரித்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.